கொவிட்-19 தொற்றினால் இரண்டு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு - ஸ்லோவாக்கியா

02.02.2021 10:26:21

ஸ்லோவாக்கியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இரண்டு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்லோவாக்கியாவில் கொவிட்-19 தொற்றினால் இரண்டு இலட்சத்து 50ஆயிரத்து 357பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 47ஆவது நாடாக விளங்கும் ஸ்லோவாக்கியாவில் இதுவரை நான்காயிரத்து 711பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 444பேர் பாதிக்கப்பட்டதோடு 69பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 26ஆயிரத்து 723பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 580பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை இரண்டு இலட்சத்து 18ஆயிரத்து 923பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.