ரணில் - பசில் சந்திப்பு

22.03.2024 07:50:32

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்க்ஷவுக்கும் இடையில் நேற்று (21) இரவு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஜனாதிபதி தேர்தல் மற்றும் எதிர்வரும் தேர்தல்கள்,  அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சரவைக்கு அறிவித்ததன் பின்னரே இந்தச் சந்திப்பு இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.

இதன்படி எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டை பசில் ராஜபக்க்ஷ அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், தேர்தல்கள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படாததால், எதிர்காலத்தில் இது தொடர்பில் மேலும் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.