மணிவண்ணனுக்கு எதிராக சதித்திட்டம் ?

01.12.2021 10:17:38

யாழ் மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்படவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாநகர சபையின் முதல்வர் வி.மணிவண்ணன், எதேச்சையாக சில முடிவுகளை எடுப்பதற்காக யாழ்ப்பாண மாநகர சபையினை அங்கத்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்குரிய பாதீடு 15 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு எதிர்த்து வாக்களிக்க உள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறிப்பாக யாழ்ப்பாண மாநகர முதல்வராக மணிவண்ணன் பதவியேற்றதில் இருந்து யாழ்ப்பாண நகரப் பகுதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளதோடு மக்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ள நிலையில் யாழ் மாநகர சபையில் அங்கத்துவம் பெறும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மாநகர முதல்வருக்கு எதிராகச் செயற்படுகின்றமை தொடர்பில் சமூக ஆர்வலர்களும் விசனம் வெளியிட்டுள்ளனர்.