உர தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கிழக்கிலும் ஆர்ப்பாட்டம்!

18.10.2021 05:26:58

விவசாயிகள் தற்போது முகங்கொடுத்துள்ள உர தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இன்று(18) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் நாடளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் உள்ள சகல கமநல சேவை நிலையங்களுக்கு முன்பாகவும் இன்று காலை 9 மணிமுதல் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்