திணறும் அமைச்சர்கள்!

11.07.2022 09:36:18

சிறிலங்கா அமைச்சர்கள் பலர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள போதிலும், இராஜினாமாக்கள் சட்டரீதியாக நடைபெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக அமைச்சர்கள் அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுக்க முடியாத நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

இலங்கையில் சமகால அரசியல் பெரும் நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளது.

மக்கள் புரட்சி

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் புரட்சியையடுத்து மக்களால் விரட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் தலைமறைவாகி உள்ளார்.

அவர் காணாமல் போயுள்ளதால், அமைச்சர்களின் இராஜினாமாக்களை ஏற்க யாரும் இல்லாததே அமைச்சர்கள் அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுக்க முடியாத நெருக்கடி நிலைக்கு முகங்கொடுப்பதற்கான பிரதான காரணமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் பதவி விலகல்

அந்த வகையில், அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, பந்துல குணவர்தன, மஹிந்த அமரவீர மற்றும் தம்மிக்க பெரேரா ஆகியோர் ஏற்கனவே தமது இராஜினாமா தொடர்பில் அறிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில்,  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.