கிளிநொச்சியில் நேற்று உயிரிழந்த மூன்று பேருக்குக் கொரோனா

11.09.2021 06:00:19

கிளிநொச்சியில் நேற்று உயிரிழந்த மூன்று பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த நபர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவசம்பு தியாகராசா (வயது 79), முத்தையா விசுவலிங்கம் ( வயது 57), அருட்பிரகாசம் லூசியா புஸ்பமலர் (வயது 74) ஆகியோரே உயிரிந்த நிலையில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.