மன்னார் நகரை பொத்துவில் – பொலிகண்டி பேரெழுச்சிப் பேரணி சென்றடைந்தது!

06.02.2021 09:55:15

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி மன்னார் நகருக்குள் சென்றதுடன், தற்போது பேரணி மன்னார் மத்திய பேருந்து நிலையத்தைச் சென்றடைந்துள்ளது.

அங்கு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் எழுச்சிப் பேரணி தொடர்ந்து முன்னேறி வருகிறது.

இதேவேளை, மன்னாரில் வைத்து தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன் பேரணியுடன் இணைந்து ஆதரவு தெரிவித்துள்ளார்.