மீண்டும் மன்னிப்பு கோரியது முகநூல் நிறுவனம்

09.10.2021 07:20:57

ஒருவாரக் காலப்பகுதியில் இரண்டு முறை முகநூல் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் செயலிழந்தமைக்கு முகநூல் நிறுவனம் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளது.

இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஏற்பட்ட தடையைப் போல, நேற்றைய தினமும் இரண்டு மணிநேர செயலிழப்பு ஏற்பட்டது.

இதனால், முகநூலிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் உள்ளிட்ட செயலிகளும் பாதிக்கப்பட்டன.

எனினும் இந்தக் கோளாறு சரி செய்யப்பட்டுள்ளதாகவும், சேவைகள் வழமைக்கு திரும்பியதாகவும் முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை, முகநூல் , வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் கிட்டத்தட்ட 6 மணித்தியாலங்கள் செயலிழந்தது.

இதனால் உலகளவில் சுமார் 3.5 பில்லியன் பயனர்கள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.