தமிழை பயிற்று மொழியாக்க இயலாது

08.11.2021 09:52:52

 தமிழகத்தில் உள்ள ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் தமிழை பயிற்று மொழியாக்க இயலாது, ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் அந்தந்த மாநில மொழிகளை பயிற்று மொழியாக்க இயலாது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தமிழை கட்டாய பாடமாக்கவும், பயிற்று மொழியாக்கவும் கோரி கடம்பூரை சேர்ந்த செல்வகுமார் தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.