
வெளிநாட்டு ரசிகர்களுக்கு ஒலிம்பிக் போட்டியில் அனுமதி மறுப்பு !
10.03.2021 09:34:42
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜப்பானில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஜூலை மாதம் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது குறித்து ரசிகர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது.
இதில் 47 சதவீதம் பேர் குறைந்த எண்ணிக்கையில் ரசிகர்களை அனுமதிக்கலாம் எனவும், 44 சதவீதம் பேர் ரசிகர்களை அனுமதிக்க வேண்டாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக ஜப்பான் அரசு மற்றும் ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.