வவுனியா பல்கலைகழகத்தின் செயற்பாடுகள் உத்தியோக பூர்வமாக ஆரம்பம்!

01.08.2021 05:22:02

வவுனியா பல்கலைகழகம் இன்றிலிருந்து தனியான பல்கலைக்கழகமாக தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றது.

யாழ்பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைகழகமாக கடந்தமாதம் தரமுயர்த்தப்பட்டிருந்தது. அதன் உத்தியோக பூர்வ செயற்பாடுகள் அனைத்தும் இன்று முதல் (01) ஆரம்பிக்கப்படவுள்ளது.அந்தவகையில் இலங்கையின் 17 ஆவது அரச பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு வட மாகாண இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக உருவாக்கப்பட்டு 1997ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகமாக தரமுயர்த்தப்பட்டது. தற்போது குறித்த வளாகம் ஒரு தனியான பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கலாநிதி த.மங்களேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.