இலங்கையில் அதிகரித்துக்கொண்டே போகும் எரிபொருள் விலை !

26.02.2022 03:00:00

டீசல் மற்றும் பெற்றோல்  ஆகியவற்றின் விலையை நேற்று  நள்ளிரவு முதல்  லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம்  அதிகரித்துள்ளது.

இதன்படி, ஒரு லீற்றர் டீசலின் விலையை 15 ரூபாவால் அதிகரிப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


மேலும் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாகவும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.