
தீப்பிடித்த டெல்டா விமானம்!
மத்திய புளோரிடா விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்பு திங்கட்கிழமை (21) டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்தது.
இதனல், விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று டெல்டா ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது.
திங்கள்கிழமை காலை டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் 1213 இல், ஆர்லாண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு புறப்படுவதற்கு முன்பு விமானத்தின் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் சமூக ஊடகங்களில் தெரிவித்தனர்.
இதையடுத்து விமானத்திலிருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
விமான நிலைய மீட்பு மற்றும் தீயணைப்பு குழுவினர் பதிலளித்ததாக விமான நிலைய அறிக்கை தெரிவித்துள்ளது.
டெல்டாவின் கூற்றுப்படி, ஏர்பஸ் A330 விமானத்தில் 282 பயணிகளும், 10 விமான பணிப்பெண்கள் மற்றும் இரண்டு விமானிகளும் இந்த சந்தர்ப்பத்தின் போது விமானத்தில் இருந்தாக தெரிவிக்கப்படுகிறது.