சீனாவில் இருந்து கிளிநொச்சிக்கு வருகை தந்த அத்தியாவசிய பொருள்!

01.12.2022 18:01:45

சீனாவில் இருந்து வடக்கு மாகாணத்துக்கு சுமார் 9 லட்சம் கிலோ கிராம் அரிசி பாடசாலை மாணவர்களுக்கு சீனா அரசாங்கம் வழங்கியுள்ளது.

இலங்கை கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கு அமைவாக சீனாவுடனான இலங்கையின் இராஜதந்திர உறவு மூலம் சீனா நாட்டிடமிருந்து இவ் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

பின்னர் மாகாண கூட்டுறவு சங்கங்களின் சமாசத்திடம் ஒப்படைக்கப்பட்டு இன்றைய தினம் (01-12-2022) கிளிநொச்சி அரச தானிய களஞ்சிய சாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டு எதிர்வரும் நாட்களில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைவாக காணப்படுவதால் இவ்வாறான இராஜதந்திர உறவு மூலம் உதவிகள் பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இது தொடர்பாக மாகாண கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் பொதுமுகாமையாளர் ஜீவநாயகம் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.