வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக அறிவிப்பு !

22.07.2021 10:39:01

வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருமழையால் மும்பை நகரம் பெரும் இழப்புகளை சந்தித்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை   விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.