கார்த்திகைப்பூ விவகாரம்

04.04.2024 07:21:55

யாழ். தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில்  ஆஜராகி விளக்கமளிக்குமாறு  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை 5 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி தொடர்பில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டமை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கான விசாரணைக்கு தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில்  ஆஜராகி விளக்கமளிக்குமாறு  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழப்பாண அலுவலகத்தால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.