காரில் வைத்திருந்த சிலிண்டர் வெடித்தது

06.03.2024 07:00:00

கோவை: மதுரை சமயநல்லூரை சேர்ந்தவர் சரவணன் (32). இவர் ஏ.சி மற்றும் குளிர்சாதன பெட்டிகளை சரி செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று சரவணன் தனது காரில் கோவைக்கு வந்தார். கோவை சாய்பாபாகாலனி அருகே உள்ள கார் பார்க்கிங்கில் தனது காரை நிறுத்திவிட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குள் சென்றுள்ளார். அந்த காருக்குள் ஏர் கண்டிஷனரை நிரப்ப பயன்படும் வாயு நிரப்பப்பட்ட ஒரு சிலிண்டரும், காலியாக 2 சிலிண்டர்களும் இருந்துள்ளன. வெயிலின் தாக்கத்தால் திடீரென்று சிலிண்டர் வெடித்தது. இதில் கார் முழுவதும் சேதம் அடைந்தது. வெடிகுண்டு வெடித்ததுபோல் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தின்போது கார் பார்க்கிங் பகுதியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.