ஐக்கிய இலங்கைக்குள் நீதி சமாதானம் சமத்துவத்திற்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது இலங்கையின் நலன்களிற்கு உகந்த விடயம் – இந்திய வெளிவிவகார அமைச்சர்

05.02.2021 09:02:08

ஐக்கிய இலங்கைக்குள் நீதி சமாதானம் சமத்துவத்திற்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது இலங்கையின் நலன்களிற்கு உகந்த விடயம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில் இன்று கேள்வியொன்றிற்கு பதில்அளிக்கையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.


கடந்தமாதம் இலங்கை தலைவர்களை சந்தித்தவேளை நல்லிணக்க முயற்சிகளிற்கான தனது ஆதரவை வெளியிட்டதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இலங்கைக்குள் நீதி சமாதானம் சமத்துவத்திற்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது இலங்கையின் நலன்களிற்கு உகந்த விடயம் என தெரிவித்துள்ள ஜெய்சங்கர்
அரசமைப்பின் 13வது திருத்தம் உட்பட அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வு குறித்து அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளிற்கும் இது பொருந்தும் எனவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.