இலங்கைக்கு பயணித்த எண்ணெய் கப்பலை தடுத்து நிறுத்திய அமெரிக்கா,

10.02.2026 13:42:08

கரீபியன் பகுதியில் அமெரிக்கா விதித்த தடையை மீறி சென்றதாக கூறப்படும் Aquila II என்ற எண்ணெய் டேங்கர் கப்பலை, தென் இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ஆயுதப் படைகள் தடுத்து நிறுத்தி ஏறிச் சோதனை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கப்பல் கரீபியனில் இருந்து தப்பியோடியதாகவும், அதை அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக தொடர்ந்து கண்காணித்து இந்தியப் பெருங்கடலில் பிடித்ததாகவும் அமெரிக்க பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

குறித்த கண்காணிப்பில் ஹெலிகாப்டர்கள் மூலம் இராணுவ குழு கப்பலில் இறங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Aquila II கப்பல்

Aquila II கப்பல் முன்பு பனாமா கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டதாகவும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இதற்கு தடைவிதித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், வெனிசுவேலாவுக்கு விதிக்கப்பட்ட தடையை மீறிய கப்பல்களில் இதுவும் ஒன்று என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் உலகக் கடல்பரப்பில் அமெரிக்க அதிகாரத்தை மீறுபவர்களை அனுமதிக்க மாட்டோம் என அமெரிக்க பாதுகாப்புதுறை துறை மீண்டும் தெரிவித்துள்ளது.