கொவிட்-19 தொற்றிலிருந்து உலகளவில் ஏழரை கோடிக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர் !

01.02.2021 08:56:41

 

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து ஏழரை கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து ஏழு கோடியே 51இலட்சத்து 24ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் 10 கோடியே 35இலட்சத்து 24ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கொடிய கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், இதுவரை 22இலட்சத்து 37ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.

இதற்கு அடுத்தப்படியாக அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நாடுகளாக இந்தியா, பிரேஸில், ரஷ்யா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளன.