
நாட்டில் 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள்!
இலங்கையில் மாகாண, தேசியப் பாடசாலைகளில் தற்போது 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இதில் தேசியப் பாடசாலைகளில் 1,501 வெற்றிடங்களும் அடங்கும்.
கல்வி அமைச்சின் தகவலுக்கு அமைவாக,
மேல் மாகாணத்தில் 4,630 வெற்றிடங்களும், தென் மாகாணத்தில் 2,513 வெற்றிடங்களும் மத்திய மாகாணத்தில் 6,318 வெற்றிடங்களும் வடமேல் மாகாணத்தில் 2,990 வெற்றிடங்களும் ஊவா மாகாணத்தில் – 2,780 வெற்றிடங்களும், வடமத்திய மாகாணத்தில் 1,568 வெற்றிடங்களும், கிழக்கு மாகாணத்தில் 6,613 வெற்றிடங்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 3,994 வெற்றிடங்களும், வடக்கு மாகாணத்தில் 3,271 வெற்றிடங்களும் உள்ளன.
ஆசிரியர் சேவையின் தரம் III (A) ஐச் சேர்ந்த, இன்னும் கடமைகளைப் பொறுப்பேற்காத 353 பட்டதாரிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் பிரதமர் அறிவித்தார்.
இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, பிரதமரின் செயலாளர் தலைமையில் நிறுவப்பட்ட ஆட்சேர்ப்பு மீளாய்வுக் குழுவிடம் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், வெற்றிடங்களை நிரப்ப தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
நேற்று (21) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.