கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு 25 ஆம் திகதி பிணை?

22.03.2024 07:52:25

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்க உத்தரவு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 25 ஆம் திகதி  பரிசீலிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

குறித்த  மனுவானது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி  முன்னிலையில் இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மனு தொடர்பான ஆவணங்கள் தமக்கு கிடைக்கவில்லை என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றில் அறிவித்தார்.

இதனையடுத்து உரிய ஆவணங்களை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்குமாறு மனுதாரருக்கு அறிவித்த நீதிபதி, மனுவை எதிர்வரும் 25 ஆம் திகதி  பரிசீலிப்பதற்கு  உத்தரவிட்டார்.