திருமணத்திற்கான அனுமதி என்பது தான்தோன்றித்தனமானது

27.12.2021 17:26:55

இலங்கை பிரஜை ஒருவர் வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் செய்வதாக இருந்தால், பாதுகாப்பு அமைச்சின் பூரண அனுமதி பத்திரம் ஒன்றை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தான்தோன்றித்தனமானது என முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை பிரஜை ஒருவர் வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் செய்வதாக இருந்தால், பாதுகாப்பு அமைச்சின் பூரண அனுமதி பத்திரம் ஒன்றை பெற்றுக்கொள்ளவேண்டும் என பதிவாளர் நாயகத்தினால் சுற்று நிரும் ஒன்று வெளியிட்டிருப்பதாக தெரியவருகின்றது.

இவ்வாறாக இருந்தால், அது அரசாங்கம் எடுத்திருக்கும் தான்தோன்றித்தனமான நடவடிக்கை என்பதுடன் அருவருக்கத்தக்க செயலாகும். நாகரிமான ஒரு அரசாங்கம் ஒருபோதும் பிரஜைகளின் முக்கியமான தனிப்பட்ட சுதந்திரத்துக்கு சட்டம் இயற்றுவதில்லை.