அதிரடி ஆட்டத்தைக் கண்டு கண்ணீர்விட்ட குட்டி ரசிகை

11.10.2021 03:29:39

ஐபிஎல் தொடரின் முதல் தகுதி சுற்று போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையேயான முதல் குவாலிபயர் போட்டி டுபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்கள் குவித்தது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 60 ஓட்டங்களும், ஹெய்ட்மர் 37 ஓட்டங்களும், இறுதி வரை போராடிய ரிஷப் பண்ட் 51 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கீங்ஸ் அணிக்கு டூபிளசிஸ் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். இதன்பின் கூட்டணி சேர்ந்த ராபின் உத்தப்பா - ருத்துராஜ் கெய்க்வாட் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வேகமாக ரன்னும் சேர்த்தது. ராபின் உத்தப்பா 63 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார்.

நீண்ட நேரம் போராடிய ருத்துராஜ் கெய்க்வாட் 70 ஓட்டங்கள் எடுத்திருந்த போது 19வது ஓவரின் முதல் பந்தில் விக்கெட்டை இழந்தார். இதன்பின் இக்கட்டான நேரத்தில் களத்திற்கு வந்த தல தோனி அசால்டாக வெறும் 6 பந்துகளில் 1 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 18 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் டெல்லி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது.

இந்த நிலையில் தோனியின் அதிரடி ஆட்டத்தைக் கனடா ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர். அதுவும் டோனியின் கடைசி கட்ட ஆட்டத்தைக் பார்த்து மைதானத்தில் இருந்த குட்டி ரசிகை ஒருவர் ஆனந்த கண்ணீர்விட்டார். தற்போது அந்த புகைப்படமானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.