குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த சமயக் கல்வி அவசியம்!

11.04.2024 09:21:21

நல்லொழுக்கமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்பத் தேவையான பரிந்துரைகளை அகில இலங்கை சாசன பாதுகாப்புச் சபை முன்மொழிந்துள்ளது.

 

பொது நலனுக்காக நல்லொழுக்கமுள்ள சமுதாயத்தைக் கட்டியெழுப்ப பல திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்  உள்ளிட்ட அகில இலங்கை சாசன பாதுகாப்புச் சபையின் பரிந்துரைகள், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டது.

இதன் போது சமயக் கல்வி பாரியளவில் கைவிடப்பட்டிருப்பதாகவும், அதனாலேயே சமூகத்தில் குற்றச் செயல்கள் அதிகரிப்பதாகவும் சுட்டிக்காட்டிய அகில இலங்கை சாசன பாதுகாப்புச் சபையின் பிரதிநிதிகள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதுகுறித்து கவனம் செலுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

மேலும், நாட்டின் இருப்புக்கும், மத மறுமலர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தல் மற்றும் பிராந்திய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக, உள்நாட்டு கல்வி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட பரிந்துரைகளும் முன்மொழியப்பட்டுள்ளன.

இந்த முன்மொழிவுகளில் பெரும்பாலானவை நாட்டில் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அமைவாகவே அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜயபூமி, சுவர்ணபூமி போன்ற உரிமம் பெற்ற காணி உரிமையாளர்களுக்கு நாடளாவிய ரீதியில் உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிரந்தர காணி உறுதி பத்திரம் வழங்கும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

அத்துடன் விவசாய நவீனமயமாக்கல், மலையக தசாப்தம் உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் வெற்றியடைவதற்கு எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட பிராந்திய சாசன பாதுகாப்புச் சபைகளின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதாகவும் உறுதியளித்தார்.