இறந்தவர்களின் அஸ்தியில் ஆபரண தயாரிப்பு
05.07.2023 10:04:32
இறந்தவர்களின் அஸ்தியை வைத்து இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் நகைகள் மூலம் வருடாந்தம் சுமார் 15 லட்சம் டொலர் அந்நிய செலவாணியை பெற்றுள்ளதாக இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் இப்போதும் ஆர். கே. எஸ் அஷ்மாஷே ஆபரண வடிவமைப்புகள் ஏற்றுமதி முகவர் மூலம் செய்யப்படுகின்றன.
கேள்வி
இலங்கையில் இன்னும் இவ்வகை நகைகள் அணிவதில் விருப்பம் உள்ளவர்கள் இல்லை என்றாலும், ஐரோப்பா, ஜெர்மனி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்த நகைகளுக்கு பெரும் கேள்வி காணப்படுகின்றது.
குறித்த பொருட்களை தயாரிப்பதற்கான அனைத்து வசதிகளையும் இலங்கை முதலீட்டு சபை ஏற்கனவே சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.