சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த மன்மோகன் சிங்..!

18.07.2022 12:02:49

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதன் காரணமாக இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நாட்டின் 15-வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகின்றனர். இந்த தேர்தல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் சக்கர நாற்காலியில் வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.