மாநிலங்களுக்கு சுவிஸ் ஜனாதிபதி எச்சரிக்கை !

26.11.2021 17:00:06

அனைத்து மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அந்தந்த மாநிலங்களுக்கு சுவிஸ் ஜனாதிபதி எச்சரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் கோவிட்-19 தொற்று காரணமாக மருத்துவமனை சேர்க்கைகள் அதிகரித்து வருவதால், அந்தந்த மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளை தாயர் நிலையில் வைத்திருக்குமாறு அதிபர் கை பார்மெலின் (Guy Parmelin) கூறியுள்ளார்.

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் கூடுதல் நடவடிக்கைகள் எடுப்பது மத்திய அரசாங்கத்தின் பொறுப்பாக இருக்கக்கூடாது, அது அந்தந்த மாநிலங்களின் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

இதற்கிடையில், நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில சுகாதார இயக்குனர்களுக்கு ஜனாதிபதி கை பார்மெலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் விரைவாக அதிகரிக்கக்கூடும் என்பதை அறிந்த ஃபெடரல் கவுன்சில் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக பார்மெலின் கூறியுள்ளார்.

மேலும், ஒரு புதிய கடுமையான பணிச்சுமைக்கு மருத்துவமனைகளை தயார்படுத்துமாறு, அவர் மாநிலங்களை வலியுறுத்தினார்.

தேர்வு நடைமுறைகளை ஒத்திவைப்பது கவனமாக தயாரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். பார்மலின் உத்தரவுக்கு சுகாதார அதிகாரிகள் ஏற்கனவே பதிலளித்துள்ளனர்.

அவர்கள் (Conference of Health Directors- CDS) "தங்கள் பொறுப்புகளை ஏற்கத் தீர்மானித்துள்ளனர்" என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதே நேரத்தில், கூட்டாட்சி மட்டத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுக்க பெடரல் கவுன்சிலுக்கு CDS அழைப்பு விடுதுள்ளது.

இந்த நேரத்தில், சுவிட்சர்லாந்தில் கிடைக்கும் 880 படுக்கைகளில் 184 தீவிர சிகிச்சை படுக்கைகள் கொரோனா நோயாளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் 494 படுக்கைகளில் கோவிட் அல்லாத நோயாளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன, பொது சுகாதாரத்தின் மத்திய அலுவலகம் (FOPH) கூறியுள்ளது.

நவம்பர் 24-ஆம் திகதி நிலவரப்படி 192 படுக்கைகள் மட்டுமே காலியாக இருந்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த வாரத்தில் இதுவரை தொற்று எண்ணிக்கை 8,000-த்தை கடந்து, புதிய தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருகிறது.

இதனால், சுவிட்சர்லாந்து மூன்று வாரங்களில் அண்டை நாடான ஆஸ்திரியாவைப் போன்ற கோவிட் தொற்று விகிதங்களை அடையும் என்று சுவிஸ் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.