கிராம உத்தியோகத்தரின் கணவர் கொலை - இராணுவ அதிகாரி கைது

14.09.2021 06:45:50

 

மட்டக்குளிய பகுதியில் கிராம உத்தியோகத்தர் ஒருவரின் கணவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்ட இதனை தெரிவித்துள்ளது.

மட்டக்குளிய இராணுவ முகாமின் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.