தமிழ் மொழியை படிப்​பவர்​களின் எண்ணிக்கை அதிகரிப்பு

30.12.2024 07:51:14

நரேந்திர மோடி பிரதமராக பொறுப்​பேற்ற பிறகு மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்​கிழமை அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்

இன்னிலையில் நேற்றுடன் 117-வது அத்தி​யா​யத்தை எட்டி​யுள்​ளதுடன் இந்தாண்​டுக்கான கடைசி மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார்

இதில் உலகிலேயே மிகவும் தொன்​மையான மொழி தமிழ் மொழி ஆகும் என்றும் இது, இந்தி​யர்கள் அனைவருக்கும் பெரு​மித​மான, பெருமை சேர்க்​கும் விஷயம். என்றும் உலகெங்​கிலும் உள்ள நாடு​களில் தமிழ் மொழியை படிப்​பவர்​களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என அவர் தெரிவித்தார்

இதேவேளை கடந்த மாத இறுதி​யில் ஃபிஜி​யில் இந்திய அரசின் ஆதரவுடன் தமிழ் கற்பித்தல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் கடந்த 80 ஆண்டு​களில் ஃபிஜி​யில் பயிற்சி பெற்ற தமிழ் ஆசிரியர்கள் தமிழ் மொழியை பயிற்று​விப்பது இதுவே முதல்​முறையாகும்

மேலும் ஃபிஜி மாணவர்கள் தமிழ் மொழியையும், கலாச்​சா​ரத்​தை​யும் கற்றுக்​கொள்​வ​தில் அதிக ஆர்வம் காட்டு​கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் இந்த சம்பவங்கள் வெறும் வெற்றிக் கதை அல்ல. நம்மை பெரு​மிதத்​தால் நிரப்பு​பவை எனவும் நரேந்திர மோடி தெரிவித்தார்