நல்லூர் பிரதேச சபை தவிசாளராக மயூரன் தெரிவு
30.12.2020 10:39:53
நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் பத்மநாதன் மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு, வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில், இன்று (30) நடைபெற்றது.
இதன்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் குமாரசாமி மதுசூதனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் பத்மநாதன் மயூரனும் முன்மொழியப்பட்டு, பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது, குமாரசாமி மதுசூதனன் 08 வாக்குகளையும் பத்மநாதன் மயூரன் 10 வாக்குகளையும் பெற்றதன் அடிப்படையில், புதிய தவிசாளராக பத்மநாதன் மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.