உத்தேச வாடகை வரி:

19.06.2024 09:00:28

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் முதலாவது சொத்துக்கு மாத்திரம் வருமான வரி மட்டுப்படுத்தப்படவில்லை என்பதுடன் உத்தேச வாடகை வரியானது அனைத்து வீடுகளுக்கும் அறவிடப்பட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளதாகவும்  எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”
வாடகை வருமான வரி அறவீட்டில் முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என ஜனாபதிபதி தெரிவித்திருந்தார்.

ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் முதலாவது சொத்துக்கு மாத்திரம் வருமான வரி மட்டுப்படுத்தப்படவில்லை.
உத்தேச வாடகை வரியானது அனைத்து வீடுகளுக்கும் அறவிடப்பட வேண்டும் என்றே சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளது.

முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவதுடன். சாதாரன வருமானம் ஈட்டுபவர்களுக்கு அன்றி, அதிக வருமானம் ஈட்டுவோருக்கே இந்த வரி விதிக்கப்படும் என ஜனாதிபதி நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

எனினும், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் மாற்றம் மேற்கொள்ளமுடியாது என ஜனாதிபதி இதற்கு முன்னதாக தெரிவித்திருந்தார் ” இவ்வாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.