தொண்டர் ஆசிரியர்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் -அமைச்சர் டக்ளஸ் உறுதி

13.09.2023 12:59:24

”வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  பணியாற்றும் தொண்டர் ஆசிரியர்களுக்கு நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு  அவர்களில் தகுதியானவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும்” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிகள் இன்று(13) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்ட காலமாக தொண்டர் ஆசிரியர்களாக சேவையாற்றுகின்றவர்களுக்கு, நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.