பா.ஜனதா கட்சியினர் உண்ணாவிரத போராட்டம்
திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே பா.ஜனதா கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரத போராட்டத்திற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் அஸ்வின் என்ற ராஜசிம்ம மகேந்திரா தலைமை தாங்கினார். திருவள்ளூர்: தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் தேர்தலின்போது அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும், வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று காலை திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே பா.ஜனதா கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரத போராட்டத்திற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் அஸ்வின் என்ற ராஜசிம்ம மகேந்திரா தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர் ஆனந்த பிரியா, லோகநாதன், ஓ.பி.சி. அணி மாநில செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொது செயலாளர் கருணாகரன், ஆரியா சீனிவாசன், சீனிவாசன், ஜெய்கணேஷ், நகர தலைவர் சதீஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்