சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு

22.01.2023 15:01:55

வழக்கத்தை விட கூட்டம் இன்று அதிகரித்தே காணப்படுகிறது
 

சென்னையில் உள்ள நந்தனத்தில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 6 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியின் நிறைவு நாளான இன்று புத்தக கண்காட்சி விழாவின் கடைசி நாளான இன்று ஏராளமான பொதுமக்கள் தமக்கு தேவையான புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

இன்று ஏராளமான பொதுமக்கள் சென்னை புத்தக கண்காட்சிக்கு படையெடுத்து இருக்கிறார்கள், ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் இன்று அதிகரித்தே காணப்படுகிறது கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என குடும்பம் குடும்பங்களாக வந்து அவர்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் தேவையான புத்தகங்களை தேடித்தேடி ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.