கொவிட்-19 தொற்றினால் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

07.01.2021 09:03:26

 

போலந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மொத்தமாக 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, போலந்தில் மொத்தமாக 30ஆயிரத்து 55பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 14ஆவது நாடாக விளங்கும் போலந்தில் 13இலட்சத்து 44ஆயிரத்து 763பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் 14ஆயிரத்து 151பேர் பாதிக்கப்பட்டதோடு 553பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்து 26ஆயிரத்து 964பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 606பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 10இலட்சத்து 87ஆயிரத்து 744பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.