நிவாரணம் வழங்காவிடின் ஊரடங்கு நீங்கியதும் பஸ்களை இயக்கமாட்டோம்

11.09.2021 06:03:44

தனியார் பஸ் ஊழியர்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்காவிட்டால், நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு  நீக்கப்பட்டாலும் பஸ்களை இயக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது.

– இவ்வாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன ஊடகங்களிடம் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் காரணமாக  பஸ்கள் இயக்கப்படாததால், சுமார் 50 ஆயிரம் பஸ் ஊழியர்களும், 11 ஆயிரம் பஸ் உரிமையாளர்களும் எந்த வருமானமும் இன்றி மிகவும் மோசமான நிலைகுத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் விளைவாக, அவர்களின் குடும்பத்தினர் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, அரசு இது குறித்து கவனம் செலுத்தி பஸ் ஊழியர்களுக்கு நிவாரணப் பொதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் ஊரடங்கு நீங்கிய பின்னர் பஸ்கள் இயங்காது என்றும் அவர் மேலும் கூறினார்.