ஆண் உறுப்பை அறுத்து மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை

11.07.2023 23:39:22

ஆண் உறுப்பை அறுத்து மருத்துவக்  கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் ஐதராபாத்தில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தின்  புறநகர் பகுதியான பாப்பிரெட்டி நகரைச் சேர்ந்த   தீட்சித் ரெட்டி என்ற 21 வயதான மாணவரே,  நேற்றைய தினம் தனது வீட்டில் தனிமையில் இருந்த வேளை தனது ஆண் உறுப்பை அறுத்துத்  தற்கொலை செய்துள்ளார்.

இந்நிலையில் வீட்டுக்குத் திரும்பிய அவரது பெற்றோர் மகன் இரத்த வெள்ளத்தில்  இருப்பதைக் கண்டு அலறியடித்துக்கொண்டு பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து  அங்குவந்த பொலிஸார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த மாணவர் நீண்ட காலமாக மன உளைச்சலில் இருந்துள்ளார் எனவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்  அதிக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் எனவும், பின்னர்  மனநல மருத்துவர்களிடம்  சிகிச்சை பெற்று வந்துள்ளார் எனவும் பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும்  சோகத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்த மேலதிக விசாரணைகளைப்பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.