
சூடனில் 11பேர் உயிரிழப்பு!
30.06.2025 07:53:58
சூடானில் இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் இடையே தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில்
இராணுவம், துணை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலும், சட்ட விரோதமாகவும் செயல்பட்டு வரும் தங்க சுரங்கங்களில் இருந்து தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் இராணுவம் கட்டுப்பாட்டில் உள்ள ரெட் சி மாகாணத்தின் ஹவ்ஈத் பகுதியில் தங்க சுரங்கத்தில் நேற்று தொழிலாளர்கள் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த 11 பேர் உயிரிழந்ததுடன் மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.