’அரச பணத்தை உரிய முறையில் செலவு செய்க’

16.03.2024 08:56:27

அபிவிருத்திக்காக அரசாங்கம் வழங்கும் நிதியை உரிய முறையில் செலவழித்து அதன் மூலம் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தி, மக்களுக்கு நன்மைகளை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள் என  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து பிரதேச செயலாளர்களிடமும் கேட்டுக்கொண்டார்.

அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக அனைத்து மாவட்ட செயலாளர்களுடனும், பிரதேச செயலாளர்களுடனும் நேற்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு  குறிப்பிட்டார்.

'வலுவான எதிர்காலத்திற்கான முன்னுரை – 2024' என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில், அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.