பிரதி பொலிஸ்மா அதிபர் கைது!

25.08.2025 08:15:38

கொழும்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர்  உதித்த லியனகே இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அனுராதபுரம் – ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில், அவரது  மனைவி புதையல் தோண்டிய விவகாரம்  தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

முன்னதாக, குறித்த கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவி மற்றும் 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.