
அர்ச்சுனாவின் கேள்விக்கு கைஉயர்த்தாத நாடாளுமன்றம்!
10.09.2025 14:30:03
யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இல்லாதொழிக்கும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றினர். |
தனது உரையை ஆரம்பித்த இராமநாதன் அர்ச்சுனா, நான் சிங்களத்தில் பேசுவது உங்களுக்கு விருப்பம்தானே. நான், கேட்கின்றேன். இங்கிருக்கும் யாராவது கையை உயர்த்தி கூறுங்கள், பிரபாகரன் பயங்கரவாதி என்று, எனினும், யாரும் கையை உயர்த்தவில்லை. எனினும், உங்களுடைய ரோஹன விஜயவீர, பயங்கரவாதி இல்லை என்று நான் கையை உயர்த்தி கூறுவேன் என்றார். |