ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டத்துக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லை நீடிப்பு!

17.03.2024 15:34:04

பொருளாதார நெருக்கடியில் உள்ள பிள்ளைகளுக்கு  உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட “ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/25”க்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லை  ஏப்ரல் 1ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

தரம் 1 முதல் தரம் 11 வரை  பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தின் அடிப்படையில் இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

www.facebook.com/president.fund என்ற இணையத்தளத்தின் ஊடாக ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலிருந்து மேலதிக தகவல்களைப்  பெற்றுக்கொள்ள முடியும்  எனவும் ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.