சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

11.03.2024 14:49:26

இம்மாதத்தின்  கடந்த ஆறு நாட்களில் மாத்திரம் 40,877 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

 

அந்தவகையில்  ரஷ்யாவில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகவும்,   இதுவரை ரஷ்யாவில் இருந்து 50,800 பேரும், இந்தியாவில் இருந்து 5,602 பேரும் ஜேர்மனியில் இருந்து 4,110 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

அதேசமயம் கடந்த மாதத்தில் மாத்திரம் 218,350 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும்  சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.