
20 கோடி கேட்டாரா தனுஷ்? .
விடுதலை 2 படத்தை தொடர்ந்து வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்கப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் வாடிவாசல் படம் தள்ளிப்போயுள்ளது. இதனால் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் எஸ்டிஆர் 49 திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க ஒப்புக்கொண்டுள்ளார். சமீபத்தில் இப்படத்திற்கான அறிவிப்பு வீடியோ படப்பிடிப்பு நடைபெற்றது. விரைவில் அந்த வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளிவரவுள்ளது. எஸ்டிஆர் 49 திரைப்படம் வடசென்னை 2 என இணையத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், வடசென்னை பட தயாரிப்பாளர் தனுஷ் COPY RIGHT-ஆக ரூ. 20 கோடி கேட்டதாக தகவல் வெளிவந்தன. |
இது பெரும் சர்ச்சையான நிலையில், அதற்கான விளக்கத்தை இயக்குநர் வெற்றிமாறன் கொடுத்துள்ளார். "எஸ்டிஆர் 49 திரைப்படம் வடசென்னை 2 ஆக இருக்கும் என பேசப்பட்டு வருகிறது. அதை நான் கவனித்தேன். ஆனால், அது வடசென்னை 2 கிடையாது. தனுஷ் நடிப்பதுதான் வடசென்னை 2 அன்புவின் எழுச்சியாக இருக்கும். இந்தப் படம் வடசென்னை உலகத்தில் நடக்கும் ஒரு கதை. அதாவது அதில் இருக்கும் கதாபாத்திரங்கள், சில விஷயங்கள் எல்லாம் இப்படத்தில் இருக்கும்". தனுஷ்தான் வடசென்னை படத்தின் தயாரிப்பாளர். அப்படத்தின் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும், அதற்காக அவரிடம் நாம் உரிமை கேட்கவேண்டும். ஆனால், COPY RIGHT குறித்து தனுஷிடம் பேசும் போது, 'சார் உங்களுக்கு எது சரியாக இருக்குமோ அதை பண்ணுங்க. நாங்க எங்க சைடுல இருந்து NOC கொடுத்துடறோம், பணம் எல்லாம் ஒன்றும் வேண்டாம்' என்று சொல்லிட்டார். ஆனால், இது குறித்த வதந்திகளை எல்லாம் பார்க்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கு" என கூறியுள்ளார். இதன்மூலம் ரூ. 20 கோடி தனுஷ் கேட்டார் என பரவி வதந்திக்கு இயக்குநர் வெற்றிமாறன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். |