ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படம்..
25.06.2024 07:58:15
ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது.
கடந்த 1975 ஆம் ஆண்டு விண்வெளி ஆய்வுக்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் நிறுவப்பட்ட நிலையில் இதில் 22 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நிலையில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தனது சமூக வலைதள பக்கத்தில் செயற்கைக்கோள் வழியாக எடுக்கப்பட்ட ராமர் பாலம் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள ராமர் பாலம் அல்லது சேது பாலம் என்று அழைக்கப்படும் இந்த பாலம் ஒரு காலத்தில் இந்தியாவையும் இலங்கையையும் இணைத்த நிலப்பரப்பு என்று கூறப்படுகிறது.