வறட்சியால் 90,000 பேர் பாதிப்பு

05.08.2023 19:10:14

வளவ மகாவலி பிரதேசத்தில் உள்ள 12,000 ஹெக்டேயருக்கும் அதிகமான நெல் வயல்களுக்கு உடவலவ நீர்த்தேக்கத்தின் மூலம் நீர் விநியோகிக்கப்படுவதுடன், இன்று நீர்த்தேக்கத்தில் நீரின் அளவு 1.4 வீதமாகவே காணப்படுகின்றது.

இதனால் சுமார் 86,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில், சமனல நீர்த்தேக்கத்தில் இருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு போதியளவு நீரை திறந்துவிடுமாறு கோரி விவசாயிகள் ஆரம்பித்துள்ள சத்தியாகிரகப் போராட்டம் இன்று 13ஆவது நாளாகவும் தொடர்கிறது.

இதேவேளை, சமனல குளத்திலிருந்து 20 நாட்களுக்கு மின்சார தடையின்றி நீர் விநியோகம் செய்ய முடியும் என நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று பொலன்னறுவையில் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு நீர் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள தாம், பதவியை இராஜினாமா செய்யவும் தயார் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.