இறுதிப் போட்டிக்கு முதலாவது அணியாக தகுதி பெற்றது குஜராத் !

25.05.2022 17:39:09

2022ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதலாவது அணியாக, குஜராத் டைட்டன்ஸ் அணி தகுதிபெற்றுள்ளது.

 

இராஜஸ்தான் றோயல்ஸ் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற முதலாவது தகுதிகாண் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி, 7 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இராஜஸ்தான் றோயல்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர், 189 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 19.3 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்த நிலையில்,191 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.