தமிழீழத்தில் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்” நூல் வெளியீட்டு விழா

26.11.2021 16:47:37

ஆய்வாளர் ந.மாலதியின் “தமிழ்பெண் பொதுவெளி : தமிழீழத்தில் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்” எனும் நூல் வெளியீட்டு விழா தற்போது இடம்பெற்று வருகிறது.

தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் 67ஆவது பிறந்த நாளான இன்று, சென்னை எழும்பூர் தாயகத்தில் நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன், தவாக தலைவர் தோழர் பண்ருட்டி வேல்முருகன், மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் கணேசமூர்த்தி, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் தோழர் மல்லை சத்யா, பேரா.சரஸ்வதி மற்றும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஆகியோர் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றுகின்றனர்.