கொவிட்-19 தொற்றினால் ஜேர்மனியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75ஆயிரத்தைக் கடந்தது !

20.03.2021 10:10:53

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 75ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றினால் 75ஆயிரத்து 73பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 10ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில், இதுவரை 26இலட்சத்து 45ஆயிரத்து 186பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 16ஆயிரத்து 557பேர் பாதிக்கப்பட்டதோடு 195பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 68ஆயிரத்து 413பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 848பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 24இலட்சத்து ஆயிரத்து 700பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.